Skip to main content

Posts

Showing posts from June, 2005

பத்தாம் நூற்றாண்டுத் தமிழ்... இருபத்தோராம் நூற்றாண்டு இசை!

சென்னை, கத்தோலிக்க திருச்சபையின் தமிழ் மையத்தின் நவீன சவுண்ட் ஸ்டுடியோவில், சுற்றிலும் இதமான ஒலிப்பின்னல்கள் சூழ, இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் ஆரட்டோரியோ பகுதியைக் கேட்டு மகிழ்ந்தேன். உடனே, அவருக்கு போன் செய்து பாராட்டினேன். ''வீட்டுக்கு வாங்க, சாவகாசமா பேசலாம்!'' என்றார். சென்றேன். முதலில், திருவாசகம் சிம்பொனி அனுபவம். இதை சிம்பொனி என்று அழைப்பது சரியில்லை என்கிறார். ஆரட்டோரியோஎன்கிற வகையில் தான் சேரும். ஆரட்டோரியோ என்பது musical work for orchestra and voices on a sacred theme. வாத்தியங்களுக்கும் குரல்களுக்கும் ஆக்கப் பட்ட புனிதமான கருத் துள்ள இசைப் படைப்பு. ''சிம்பொனி என்பது குறைந்தபட்சம் நான்கு அசைவுகள் கொண்ட விஸ்தாரமான இசைக்கோலம். சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவுடன் வாசித்ததால் மட்டும் இதை சிம்பொனி என்று சொல்ல முடியாது. கூடாது'' என்றார். இருந்தும், சிம்பொனி என்ற பதம் நிலைத்துவிட்டது. தென்னாடுடைய சிவன் என்னாட்டுக்கும் இறைவன் விதித்தது அது. மாணிக்கவாசகரின் தமிழ் இளையராஜாவின் பரிவு மிக்க குரலில், முதலில் ஒலிக்கிறது. 'பூவார் சென்னி மன்னன் என் புயங்க

கலந்துரையாடல் பற்றி சுஜாதா..

இந்த வார கற்றதும் பெற்றதும்'ல் கலந்துரையாடல் பற்றி சுஜாதா... நான் எழுதியது அனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்து என்னைவிடக் கூர்மையாக ஞாபகம் வைத்திருக்கும் வலுவான வாசகர்கள் ஒன்பது பேரைச் சந்திக்கும் வாய்ப்பை நண்பர் தேசிகன் ஏற்படுத்தியிருந்தார். உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலில் டம்ளர்கள் இரைச்சலினூடே சந்தித்தோம். எனக்கே ஞாபகமில்லாத பல கதைகளை இகாரஸ் பிரகாஷ் போன்றவர்கள் நினைவு வைத்துக்கொண்டு அதன் உள்ளர்த்தங்களை அலசும்போது லக்கலக்கலக்கலாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. இவ்வளவு அருகில் ஒரு எழுத்தாளன் இவ்வளவு விவரமான வாசக/வாசகியரைச் சந்திப்பது மற்ற பேருக்கு பன்னீராக இருக்கலாம். எனக்குக் கொஞ்சம் வெந்நீர்தான்! கதையோ, கட்டுரையோ எழுதி முடித்து பிரசுரமான மறுகணம் எழுதியவனைவிட்டு பரதேசம் போய்விடுகிறது. அது ஊர் ஊராக அலைந்து கடைசியில் எழுதினவனிடம் திரும்பும்போது அடையாளம் மாறி சின்னச் சின்ன சிராய்ப்புகளுடன் வந்து சேருகிறது. நான் எழுபது, எண்பதுகளில் எழுதிய கதைகளான 'குருபிரசாத்தின் கடைசி தினம்' 'நகரம்', 'வீடு', 'முரண்' போன்ற கதைகள் என்னை விவாகரத்து செய்துவிட்டன. அவற்றைப் பிற

ஸ்ரீரங்கம் - 6

எறக்குறைய ஒரு வருடம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீரங்கம் தொடரை விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்... - தேசிகன் - * - * - *   [%image(20050818-sri_venugopal.jpg|432|330|Srirangam Venugopal)%] இந்த பதிவில் கிபி 1178-1310 முதல் நடைபெற்ற நிகழ்ச்சிகளை சுருக்கமாக தந்துள்ளேன். இந்த காலத்தில் சோழ அரசர்கள் வீழ்ச்சியும், பாண்டிய அரசர்கள் மலர்ச்சியும் பெற்ற காலம் என்று கூறலாம். சோழ மற்றும் பாண்டிய அரசர்களின் சண்டையினால் மைசூரை ஆண்ட ஒய்சள அரசர்கள், சேர அரசர்கள், இலங்கை அரசர்கள் மற்றும் கீழ்த்திசைக் கங்கர்களும் ஊடுருவ நல்ல சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. பாண்டிய அரசர்களுக்கு எதிராக ஒய்சள அரசர்கள் சோழர்களுக்கு உதவி செய்தனர். காலபோக்கில் ஸ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் உள்ள கண்ணனூர், விக்கிரமபுரி ஆகிய இடங்களை தங்களுக்கு கீழ் கொண்டு வந்து, தங்களின் உப தலை நகரமாக ஆக்கிகொண்டார்கள். பின்னர் முஸ்லிம் மன்னர்கள் மாலிக்காபூர்(1310-11), துக்ளக்(1323) போன்றவர்கள் கோயிலை சூரையாடினர். தொடர்ந்து ஸ்ரீரங்கம் வைணவ தலைமைச் செயலகமாக திகழ்ந்தது. ராமானுஜருக்கு அடுத்து வந்தவர்கள் ஸ்ரீரங்கம் கோயிலை சார்ந்தவர்கள் ஆவர். இந்த காலக

சுஜாதாவின் வானொலி பேட்டி

சுஜாதாவின் கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள முடியாதவர்களுக்கு ஒரு வானொலி பேட்டி ;-) அன்புடன், தேசிகன். * - * - * ரேடியோவின் பயனை நாம் குறைத்து மதிப்பிட்டிருக்கிறோம். ரேடியோதான் எந்தவித கவனக் கலைப்பும் இன்றி - நகம் வெட்டுதல், முகம் தேய்த்தல் போன்ற மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டே, அவ்வப்போது தேவைப்பட்டதைக் கேட்டுக் கொள்ளும் வசதிபடைத்த ஊடகம். டிவி என்றால், ஒரு இடத்தில் உட்கார்ந்து கண்ணும் காதும் உற்று கேட்க, பார்க்க வேண்டும். சினிமா இன்னும் மோசம். இருட்டில் உட்கார்ந்து கொண்டு பார்க்க வேண்டும். ரேடியோ அப்படியில்லை. காரில், வீட்டில், சமையலறையில் ஏன் பாத்ரூமில் கூட கேட்கலாம். அதுவும் இப்போது எஃப்எம் வசதி வந்ததும், நிறைய நிலையங்கள் உருவாகி நாள் முழுதும் சினிமா பாடல்கள் கேட்கக் கூடிய பாக்கியங்கள்¢ முதலில் தோன்றியிருக்கின்றன. மெல்ல மெல்ல இது அலுத்துப்போய், நாள்¢ முழுவதும் இலக்கியம், நாள் முழுவதும் கர்நாடக சங்கீதம், நாள் முழுவதும் காமெடி, நாள் முழுவதும் அறிவியல் என்று சானல்கள் அமெரிக்காவில் போல வரலாம். இப்போது இவையனைத்தையும் பேல்பூரி போல் கலந்து கொடுக்கும் அரசு சார்ந்த ஆல் இண்டியா ரேடியோ நிலைய

சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல்-0 4 ( படங்கள் )

படங்களை பார்க்க கிள்க் செய்யவும் [%popup(20050819-sujatha_meet_1.jpg|360|270|படம் 1)%] [%popup(20050819-sujatha_meet_2.jpg|360|270|படம் 2)%] [%popup(20050819-sujatha_meet_3.jpg|360|270|படம் 3)%] [%popup(20050819-sujatha_meet_4.jpg|360|270|படம் 4)%] [%popup(20050819-sujatha_meet_5.jpg|360|270|படம் 5)%] [%popup(20050819-sujatha_meet_6.jpg|360|270|படம் 6)%] [%popup(20050819-sujatha_meet_7.jpg|360|270|படம் 7)%] [%popup(20050819-sujatha_meet_8.jpg|360|270|படம் 8 )%] [%popup(20050819-sujatha_meet_9.jpg|360|270|படம் 9)%]    

சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல்-0 3

ஹரன்பிரசன்னா, எனி இண்டியன்.காமில் இருக்கிறார். வயது 29. http://www.nizhalkal.blogspot.com . நான் சந்திக்க நினைக்கும் எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதாவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குத் தேசிகன் மூலம் கிடைத்தது. சுஜாதாவின் எழுத்துகளை மிகவும் விரும்பி வாசித்திருந்த நான், அதை வாசித்த காலத்திலேயே சுஜாதாவைச் சந்திக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். சென்னையில் வுட்லாண்ட்ஸ் டிரைவ் இன்னில் சுஜாதாவைச் சந்தித்தபோது, எனக்குள் ஒரு இனம்புரியாத சந்தோஷமும் வாழ்நாளில் நாம் நினைத்த ஒன்று நிறைவேறுகிறது என்கிற எண்ணமும் இருந்தது. சந்திப்பு முடியும்போது, நான் சந்திக்க நினைத்திருந்த ஆதர்ச எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர் என்று அவரிடம் சொன்னேன். சிரித்தார். தேர்ந்தெடுத்துக்கொண்ட கேள்விகளுடன் செல்லாமல், ஒரு சிறிய சந்திப்பு என்றளவிலேயே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் சென்றிருந்தேன். சந்திப்பு அப்படியே அமைந்தது. சுஜாதா புதியதாக எதையும் சொல்லிவிடவில்லை. இத்தனை வருடங்களாக அவர் எதை எழுதிக்கொண்டிருக்கிறாரோ அதையே சொன்னார். மீண்டும் மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டிருந்த கேள்விகளே மீண்டும் கேட்கப்பட்டன. நேரில் சந்த

சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல்-0 2

ராம்கி,(சில சமயம் ரஜினி ராம்கி), வயது 29. சென்ட்ரல் எக்ஸைஸில் இருக்கிறார். http://rajniramki.blogspot.com .  சுஜாதாவின் வருகைக்காக உட்லண்ட்ஸ் வாசலில் காத்திருந்த நேரத்தில் மனதில் தோன்றியது இதுதான். சுஜாதா எழுதாத விஷயங்கள் எதைப்பற்றி. 'அதுக்கு முதல்ல அவரு எழுதின எல்லாத்தையும் படிச்சிருக்கணும்டா மவனே' மனசாட்சியின் குரலை அலட்சியம் பண்ணாமல் கூட்டத்தோடு கூட்டமாய் அடக்கி வாசிக்கலாம் என்று முடிவெடுத்த நேரத்தில்தான் சரியாக ஆறு மணிக்கு காரில் வந்து இறங்கினார். எப்போதும் எக்கனாமிக் டைம்ஸ் படிக்கும் எதிர்வீட்டு மாமாவை ஞாபகப்படுத்தும் தோற்றம். நடையில் மட்டும் நிறையவே தாத்தாக்களை. வெளிச்சமில்லாத இடத்தில் பக்கத்து சீட் ஹிந்தி ஆசாமிகளின் கூச்சல்களுக்கு நடுவே ரவுண்டு கட்டி உட்கார்ந்து பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பாக்கெட் நாவலின் கடைசி பத்து பக்கங்களில் வரும் கேள்விகளைப் போல 'ஸார், நீங்க வஸந்தா, கணேஷா'ன்னு நம்ம ஸ்டைலில் கேட்டு பூஜையை போட்டுவிடலாமான்னு நினைத்த நேரத்தில் அவரே ஆரம்பித்தார், கொஞ்சம் கனமான விஷயத்தில். நுழைவுத்தேர்வு குளறுபடிகளை பற்றி ஏ.சி ரூமில் உட்கார்ந்து பேசி

சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல்-0 1

சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல் இந்த பதிவு கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு முறை சாவி உட்லேண்ட்ஸ் டிரைவினில் சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தார். அதன் பிறகு போன சனிக்கிழமை(28/5/2005) அன்று ஒரு கலந்துரையாடல் நடந்தது. இதில் ஹரன்பிரசன்னா, ராம்கி, சுரேஷ் கண்ணன், ஐகாரஸ் பிரகாஷ், ராஜ்குமார், உஷா, சங்கர், கிருபா ஷங்கர் கலந்துக்கொண்டார்கள். இந்த பதிவு இதில் கலந்துக்கொண்டவர்கள் எழுதியது. அவியல் போல் எல்லாம் இருந்தாலும் சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன். சிறுகதை, கவிதை, கணேஷ் வசந்த், கல்விமுறை, மீடியா டீரிம்ஸ், சங்கர், பாய்ஸ், சினிமா அனுபவம், அந்நியன், கமல், மும்பை எக்ஸ்பிரஸ், நாவல், எஸ்.ஏ.பி, வலைப்பதிவு என்று பல தலைப்புகள் போண்டா காப்பியுடன் பேசப்பட்டது. கலந்து கொண்டவர்கள் அனைவரும் எனக்கு எழுதியனுப்பிய அதே வரிசையில் இங்கு தந்துள்ளேன். எல்லோருக்கும் என் நன்றிகள். படங்கள் தந்து உதவிய ராம்கிக்கு ஸ்பெஷல் நன்றிகள். * - * - * பிரதீப்-ஃஸ்பாட் வேர் என்ஜினியர், வயது 26 - வலைப்பதிவு முகவரி - http://espradeep.blogspot.com/ சனிக்கிழமை இரவு வீடு வந்து சேர்ந்தேன். அம்மா கேட்டாள், என்ன? சுஜாதாவை

சாரி, பெஸ்ட் ஃபிரண்ட்

"சாரி, பெஸ்ட் ஃபிரண்ட்". இது புத்தகத்தின் பெயர். இந்த புத்தகத்தை எவ்வளவு பேர் படித்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் நான் சமிபத்தில் படித்த ஒரு நல்ல சிறுகதை தொகுப்பு இது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பு சில பள்ளிகளில் துணைப்பாடமாக இருக்கிறது. இதில் பத்து சிறு கதைகள் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. அவை - பாம்புப்பட்டிக்கு என்ன ஆச்சு - சாய் விடேகர் மாறிய விளக்குகள் - போய்லி சென்குப்தா சுரங்கப்பாதை - ஷமா ஃபியூட்டேஹல்லி சிங்கத்துக்கு புத்துயிர் - கிதா ஹரிஹரன் வெல்லும் அணி - சாவித்திரி நாராயணன் பாட்டுக்கெல்லாம் ஒரு பாட்டு - ஸ்வப்னா தத்தா சாரி, பெஸ்ட் ஃபிரண்ட் ஹேமாங்கினி ராணடே ரிஷபனின் ராமன் - கீதா ஹரிஹரன் பொம்மை - சாவன் தத்தா மாங்கா மடையர்களும் தேங்கா மடையர்களும் - ஷமா ஃபட்டேஹல்லி இக்கதைகளை கீதா ஹரிஹரன் மற்றும் ஷாமா ஃபியூட்டேஹல்லி தொகுத்துள்ளார்கள். தமிழில் அழகாக மொழிபெயர்த்தவர் அ.குமரேசன். ஓவியங்கள் ரஞ்சன் தே. பாரதி புத்தகாலயம். 80 பக்கங்கள், விலை 25/= ( சரவணபவன் ஒரு மசால் தோசை + மினி காப்பியின் விலை ) ஒவ்வொரு கதை