Skip to main content

சுஜாதா பதில்கள், வாரம் ஒரு பாசுரம்.

இந்த வாரம் குங்குமத்தில் சுஜாதா பதில்களில் இரண்டை இங்கே தந்திருக்கிறேன்.


கே: அப்துல் கலாமுடன் இணைந்து நீங்கள் எழுதுவதாக இருந்த 'இந்திய ராக்கெட் இயல்' புத்தகம் எந்த நிலையில் உள்ளது ?


பதில்: கைவிடப்பட்டது.


கே: நீங்கள் யாருக்கு தொண்டன், யாருக்கு தலைவன் ?


பதில்: என்னை வியக்கவைக்கும் புத்தகங்களை எழுதியவர்களுக்கெல்லாம் தொண்டன்; ஒரு எறும்புக்கு கூட தலைவனாக என்னால் இருக்க முடியாது.



இந்த வாரம் கல்கியில் வந்த வாரம் ஒரு பாசுரம்


தேரழுந்தூர் காவிரிக் கரை யில் உள்ள ஊர். திருமங்கை யாழ்வார் இவ்வூரில் நின்றிருக் கும் பெருமானை ஏத்தி 45 அழகான பாடல்கள் பாடியிருக்கிறார். அவற்றில் ஒன்றை மாதிரி பார்க்கலாமா?


இந்தப் பாடலில் கஜேந்திர மோட்சம் சொல்லப்பட்டிருக்கிறது.


‘குலத் தலைய மதவேழம்
பொய்கை புக்கு,
கோள் முதலை பிடிக்க,
அதற்கு அனுங்கி நின்று,
நிலத் திகழும் மலர்ச் சுடர்
ஏய் சோதீ! என்ன,
நெஞ்சு இடர் தீர்த்தருளிய
என் நிமலன் காண்மின் -
மலைத் திகழ் சந்து, அகில், கனகம்,
மணியும் கொண்டு
வந்து உந்தி, வயல்கள்தொறும்
மடைகள் பாய,
அலைத்து வரும் பொன்னி வளம்
பெருகும் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று, உகந்த
அமரர் கோவே.’


‘நல்ல இடத்தில் பிறந்து (குலத்தலைய) அலைகிற யானை, பொய்கையில் புகுந்த போது கொடிய (கோள்) முதலை அதனைப் பிடித்துக்கொள்ள, பயந்துபோய் (அனுங்கி) ‘நிலவைப்போல் ஒளிரும் சோதியே!’ என்று கதற, அதன் கஷ்டத்தைத் தீர்த்தருளிய பா¢சுத்தமானவனை (நிமலன்) காணுங்கள். மலையிலிருந்து வரும் சந்தனமும் அகி லும் பொன்னும் மணியும் கொண்டு வந்து தள்ள மடைகள் எல்லாம் பாயும் காவிரியின் வளம் பெருகும் திருவழுந் தூரில் காட்சி தரும் பெரு மானே! தேவர்களுக்கு அதி பதியே!’


ஆழ்வார் காலத்தில் காவிரி நதியில் சந்தனமும் அகிலும் பொன்னும் மணியும் பாய்ந்திருக்கின்றன. இப்போது குப்பை களுக்கும் தண்ணீர்ப் பாம்புகளுக்கும் பயந்து, குளிக்காமல் வருகிறோம். திவ்ய பிரபந்தத்தில், பொரிய திருமொழி ஏழாம் திருமொழி எட்டாம் பத்தில் உள்ள இந்


தப் பாடல்களில், மகாவிஷ்ணுவின் மற்ற அவதாரங்களையும் ஒவ்வொரு பாசுரமாகப் பாடியிருக்கிறார்.


குதிரை முக அயக்¡£வ அவதாரம், சிங்க முக நரசிம்மாவதாரம், கிருஷ்ணாவதாரம், வாமனாவதாரம், இராமாவதாரம். பன்றி யாய் மீன் ஆகி அ¡¢ ஆய், பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன்தன் எல்லா அவதாரங்களையும் பாடுகிறார். அற்புதமான பாசுரங்கள்!


( உடம்பு நல்ல இருக்கும் போதே திவ்விய தேசங்களுக்கு செல்ல வேண்டும் என்று திருமங்கை ஆழ்வார் சொல்லியிருக்கிறார் என்று ஒரு முறை என்னிடம் சுஜாதா சொல்லியிருக்கிறார் )

Comments

  1. அற்புதம் Desikan Narayanan. A very heart soothing description. Reading several times.

    ReplyDelete

Post a Comment