Skip to main content

Posts

Showing posts from August, 2015

காக்கா

“ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவாரோ” - திருமங்கை ஆழ்வார் சில மாதங்களுக்கு முன் தி.நகரிலிரிந்து தாம்பரம் சானிடோரியத்துக்கு குடிபெயர்ந்தேன். ஸ்ரீவைஷ்ணவர்கள் அதிகம் இருக்கும் இடம் அதனால் சரவணபவன் கூட கிடையாது என்பது முதல் ஆச்சரியம். பழம்பெரும் தமிழ் எழுத்தாளர்களைவிட கொசு அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் ரிஸ்க் எடுக்காமல் முதல் வேலையாக நெட்லானை வெல்கரோ கொண்டு கதவை விட்டுவிட்டு ஜன்னல் பொன்ற சின்ன ஓட்டைகளை அடைக்க ஏற்பாடு செய்தேன். பக்கத்துவிட்டு முருங்கை மர குப்பை உள்ளே வராமலும், நான் தாளித்தால் கடுகு கூட ஜன்னல் வழியாக வெளியே போகாதபடி மிகவும் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். மன்னிக்கவும் வாழ்ந்தேன். பெங்களூரில் ஒரு வாரம் வாசம் முடித்துவிட்டு செய்துவிட்டு இன்று சென்னை திரும்பினேன். காலை ஐந்தரைக்கு வீட்டை திறந்தால் எல்லாம் அலங்கோலமாக இருந்தது. ஷூராக் கீழே விழுந்து, நியூஸ் பேப்பர் கலைந்து, வீடு முழுக்க ஏதோ மஞ்சள் திரவம்... கூடவே வயிற்றை குமட்டிக்கொண்டு எலி செத்த நாற்றம். செத்த எலி எங்கே ? எங்கிருந்து வந்திருக்கும் என்று காலை ஆறு மணிக்கு ஆராய

ராமானுஜலு உருவான கதை

” ராமானுஜலு பற்றியும் எழுதுங்களேன்”... ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இரண்டு முக்கியமான விஷயங்கள் செய்ய கூடாது - பகவத அபச்சாரம்( நாராயணனே நமக்கே பறை தருவான்!), பாகவத அபச்சாரம். இதில் பாகவத அபச்சாரம் செய்யவே கூடாது. அந்த அபச்சாரத்தை பெருமாள் கூட மன்னிக்க மாட்டார். கூரத்தாழ்வாருக்கு கண்ணிழந்த போது, உடையவர் அவரை பார்த்து உமக்கு இந்த நிலையா ?” என்று கேட்ட போது அதற்கு கூரத்தாழ்வார் ”யாராவது ஒரு வைணவரின் நெற்றியிலுள்ள திருமண் கோணலாக உள்ளதே என்று நினைத்திருப்பேனோ என்னவோ” என்று பதில் அளித்தார். அவருக்கே இந்த நிலமை என்றால் நம் போன்றவர்களுக்கு ? ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீசூர்ணம் கூட இட்டுக்கொண்டு வெளியே போக வெட்கப்படும் இந்த காலத்தில் நாயுடு சமுகத்தினர் நெற்றி நிறைய திருமண் தரித்துக்கொண்டு கோயிலில் “அங்கே போய் நில்லு” என்று அந்த பாகவதர்களுக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் துளிக்கூட Ego இல்லாமல் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் காண்பிக்காமல் அவர்களால் எப்படி இருக்க முடியும் என்று யோசித்ததுண்டு. இதை வைத்துக்கொண்டு எழுதியது தான் ராமானுஜலு கதை. ஸ்ரீராமானுஜர் பாஞ்சஜன்யம் ( சங்கு ) அம

பெருங்காயம் உருவான கதை

” அப்பாவின் ரேடியோ ” சிறுகதை பற்றி ஆமருவி தேவநாதன் தன் வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளார் . அவருக்கு என் நன்றி. கடைசியில் “இவற்றை எழுதக் காரணமான நிகழ்ச்சிகள் பற்றி திரு.தேசிகன் எழுதினால் இன்னமும் சுவைக்கும்.” என்று விண்ணப்பம் செய்துள்ளார். எழுதலாம். ஆனால் ரொம்ப போஸ்ட்மார்டம் செய்தால் சிறுகதை சுவைக்காது. சுஜாதாவுடன் பழகிய நாட்களில் அவர் எழுதும் சிறுகதைகளை பற்றி என்னிடம் விவரிப்பார். குறிப்பாக விகடனில் எழுதிய ஸ்ரீரங்கத்துக் கதைகளைப் பற்றியும் அதை ஒட்டி நடந்த உண்மையான சம்பவங்களை பற்றியும் என்னிடம் சொல்லியிருக்கிறார். யாருக்கும் கிடைக்காத ஒரு பெரிய பாக்கியமாக இதை நான் கருதுகிறேன். அவர் என்னிடம் அடிக்கடி சொல்லிகொடுத்த விஷயம் “details... details". அது இருந்தால் தான் ஒரு வித கதைகளுக்கு  நம்பகத்தன்மை வரும். முதல் விஷயமாக ”பெருங்காயம்” சிறுகதைப் பற்றி. ஒரு முஸ்லீம் நண்பர் ஸ்ரீவைஷ்ணவர்களை காட்டிலும் பிரபந்தங்களை அழகாக ஒப்பித்தார் என்ற ஒற்றை வரியில் கதை இருப்பதாக தோன்றியது. ஆனால் முஸ்லீம், பிராமணர் பற்றி எழுதுவது கத்தியில் நடப்பது போல. எங்கள் தாத்தா கும்பகோணம் - பாபநாசம் பக்கம் மாளாபுர

ஸ்ரீஆளவந்தார், திருமங்கை ஆழ்வாருடன் ஒரு நாள்.

31-7-15 ஸ்ரீ ஆளவந்தாருடைய திருநட்சத்திரம். ஸ்ரீஆளவந்தார் நாலாயிர திவ்விய பிரபந்தத்தை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தொகுத்தளித்த ஸ்ரீமந் நாதமுனிகள் பிறந்த ஊர். அவரது பேரனும் ஸ்ரீ ராமானுஜரின் ஆச்சாரியரும் ஆன ஆளவந்தார் அவதரித்த ஸ்தலம் காட்டுமன்னார் கோவில். ஆளவந்தார் திருநட்சத்திரம் அன்று ஆளவந்தாருடைய அவதார ஸ்தலமான காட்டுமன்னார் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று திடீர் முடிவெடுத்தேன். (கடந்த வருடம் ஆளவந்தார் குறித்து எழுதிய சிறு குறிப்பு இறுதியில் இணைத்துள்ளேன்.) ரயில், பேருந்து, ஆட்டோ என்று எல்லா இடங்களும் ”விண்டோ சீட்” கிடைத்து எங்கே திரும்பினாலும் ‘அப்துல் கலாம்’ கண்ணீர் அஞ்சலியும், வீரவணக்கம் போஸ்டர்களும் கண்ணில் பட்டது. காட்டுமன்னார் கோயில் குளம் தனியாகச் சென்ற இந்தப் பயணம் எனக்கு பல உலக விஷங்களைக் கற்றுத்தந்தது. சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயிலுக்கு பேருந்தில் சென்ற போது என் பின்இருக்கைகளில் சிலர் வந்து ஏறிக்கொண்டார்கள். அவர்களைப் பார்த்த போது ‘உடமைகளை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று உள் மனது எச்சரித்தது. தூங்காமல் கண்விழித்து காட்டுமன்னார் கோயில் பேருந்து ந